ஆரோக்கிய உணவு

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக அடிக்கடி டீ, காபி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் நம்மில் பலருக்கும் அது ஒரு பழக்கமாக மாறி விட்டது. அந்த வகையில் டீ, காபியில் கூட உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களை சேர்த்து குடிக்கலாம்.

அதிலும் குறிப்பாக நாம் பழங்களை சாப்பிட்டு குப்பை என தூக்கி எறியும் கொட்டை மற்றும் தோலில் இருந்து டீ போட்டு குடிக்கலாம். பழங்களின் கொட்டை மற்றும் தோலிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

 

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இரும்பு சத்து அதிகம் உள்ள பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எறிவதற்கு பதில் அந்த கொட்டையை வறுத்து பொடியாக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

இந்த விதையில் தாமிரம், செலினியம், இரும்பு போன்ற தாது உப்புக்கள் உள்ளதால் வாரம் ஒரு முறை இந்த டீயை குடித்து வர இரத்த சோகை, தோல் பிரச்னைகள் போன்றவை நீங்கும்.

ஆரஞ்சு பலத்தை சாப்பிட்டு விட்டு தோலை குப்பையில் போடுவோம். சிலர் அந்த தோலை அரைத்து சரும பொலிவிற்காக முகத்தில் பூசுவர்.
அதே போல் அந்த தோலில் உள்ள வெள்ளை பகுதியை நீக்கி விட்டு தோலை பொடியாக்கி அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் சேர்த்து சண்ட காய்ச்ச வேண்டும். பாதி டம்ளர் அளவு வந்த பிறகு தேன் கலந்து குடிக்காலம். இந்த தேநீரில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button