இனிப்பு வகைகள்

தொதல் – 50 துண்டுகள்

தேவையான பொருட்கள்
1 சுண்டு பச்சையரிசி
5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை)
ஏலக்காய்ப்பொடி சிறிதளவு
200 கிராம் கஜு
1 கிலோ சீனி (4 சுண்டு)
3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்)
250 கிராம் சக்கரை

செய்முறை
அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும்.
அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும்.

பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணித்தியாலம் வரை கிண்டவும்.

கலவை திரள தொடங்கியதும் மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை அல்லது முதல்பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டவும். அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும் பொடி செய்த ஏலக்காயையும் போட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி கொட்டி ஆறவிடவும். பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம்.

குறிப்பு:

உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்.
22

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button