31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
Image 24
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…மரணத்துக்கு முன் மனிதனின் மனதில் தோன்றும் கடைசி சிந்தனைகள் என்னென்னு தெரியுமா?

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியவே முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் என்றும் பிரம்ம ரகசியமாகமே.

இருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் ஆச்சரியமான முடிவுகள் தெரியவந்துள்ளன.

சில நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தனர்.

 

 

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினர்.

 

மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், மூளையை ‘ஏறத்தாழ’ மறுசீரமைப்பு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தன.

இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கு முன்னர், ‘மூளை மரணம்’ பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் பெரும்பாலும் விலங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து தெரிந்துக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

 

மரணம் நிகழும் தருணம்

உடலின் ரத்த ஓட்டம் நின்றுபோய், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறைந்து விடும்.

இந்த நிலையில், பெருமூளைச்சிரையில் ரத்த ஓட்டம் குறைவதால் (cerebrovascular ischemia), மூளையில் ரசாயன மாறுபாடுகள் ஏற்படும். மேலும் மூளையின் ‘மின் செயல்பாடு’ (Electrical activity ) முற்றிலுமாக நின்றுபோய்விடும்.

மூளை அமைதியடையும் நடைமுறைக்கு காரணம், ஆற்றல் தேவைக்கான பசியுடன் இருக்கும் நரம்புகள், தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றாலும், மரணம் நெருங்குவதால் அந்த ஆற்றல் பயன்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.

அனைத்து முக்கிய அயனிகளும், மூளை செல்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றன. இதனால் அடினோசின் டிரைஃபாஸ்பேட் கிடைப்பது பலவீனமாகின்றன.

ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

Related posts

புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ஜோடியாக `ஆர்ட் தெரபி’க்கு செல்லுங்கள்!

nathan

தாம்பத்திய வாழ்க்கையில் தடுமாறும் பெண்களுக்கான உணவுகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்கள யாராலையும் ஏமாத்த முடியாதாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

30 வயதை தாண்டிய திருமணமாகாத ஆண்களைப் பற்றி நினைக்கும் 10 விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கவனமாக இருங்கள்.! செல்போன் கேம்களின் மோகத்தால் குழந்தைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

nathan

அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்

nathan

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் சீப்பாய் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் மேஜிக்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… முத்தான 3 உடற்பயிற்சி

nathan

தெரிந்துகொள்வோமா? வயதிற்கு வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும்?

nathan