30.5 C
Chennai
Friday, May 17, 2024
625.500.560.350.160.300.0 7
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாவு புளித்துவிட்டதா?.. புளிப்பை மட்டும் தனியாக பிரிக்க இதை மட்டுமே செய்யுங்கள்..

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பலான வீடுகளில் ஃப்ரிட்ஜில் நிறைய பொருட்களை அதில் வைத்து வீணாகிக் கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் கருவேப்பிலை, புதினா குறிப்பாக இட்லி மாவு, தோசை மாவு இவை அனைத்தையும் பிரிட்ஜில வெச்சுடுவோம்.

ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டுப் போகக்கூடிய இந்த பொருட்களை எல்லாம், கெட்டுப் போகாமல் எப்படி பயன்படுத்தலாம், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கருவேப்பிலையை ஃப்ரிட்ஜில் வைக்காமல், அதை வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். ஒரு பேப்பரில், கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவிப் போட்டு நன்றாக உலர வைத்து விட்டீர்கள் என்றால், ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் வைக்கும் சாம்பார், குழம்பு, சட்னி தாளிக்க எதுவாக இருந்தாலும் அதில் நான்கு கருவேப்பிலையை எடுத்து கையாலேயே நொறுக்கிப் போட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக இப்படி போடும் கருவேப்பிலையை யாரும் தூக்கி தூர போட மாட்டார்கள்.

இதேபோல் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து, அந்த இலைகளை, காலையில் டீ போடும்போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. காயவைத்த புதினா இலைகள் ஆக இருந்தாலும், கருவேப்பிலை இலைகளாக இருந்தாலும், வருடக்கணக்காக ஆனாலும் கெட்டுப் போகாது.

இதேபோல் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து, அந்த இலைகளை, காலையில் டீ போடும்போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. காயவைத்த புதினா இலைகள் ஆக இருந்தாலும், கருவேப்பிலை இலைகளாக இருந்தாலும், வருடக்கணக்காக ஆனாலும் கெட்டுப் போகாது.

ஒருவேளை மாவு நன்றாக புளித்து விட்டால், பிரிட்ஜில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த மாவில், 1/2 லிட்டர் அளவு மாவு இருந்தால், அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். ஊற்றிய தண்ணீரை, மாவோடு சேர்த்து நன்றாக கலக்கி விடக்கூடாது. லேசாக கலந்தால் மட்டும் போதும்.

அதன் பின்பு, அந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால், நீங்கள் ஊற்றிய தண்ணீரானது மேலே தெளிந்து வந்திருக்கும்.

அந்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட்டு, மீதமுள்ள மாவை தோசை சுட்டு சாப்பிடலாம். புளிப்பு தன்மை, அந்தத் தண்ணீரிலேயே கீழே போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவை இட்லி ஊற்ற முடியாது தோசைக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு…..?

nathan

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

வல்லாரையின் அற்புத நன்மைகள்

nathan

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

sangika

இளமை தரும் இளநீர்

nathan

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan