36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு எலுமிச்சை சாற்று நீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதிகாலை வேளையில் எலுமிச்சை சாறு கலந்த நீரை பருகி வந்தால் அவர்களின் உடல் எடை குறையும்.

அத்துடன் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். தினமும் எலுமிச்சை சாற்று நீரை அருந்தி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி உடல் சுத்தமாகும்.

எலுமிச்சை பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எலுமிச்சை சாறு கலந்த நீரை தயாரிக்கும் போது, எலுமிச்சையின் வெறும் சாறை மட்டும் நீரில் போடாமல், முழு எலுமிச்சையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை பருகி வந்தால் சிறந்த உடல் நலன் ஏற்படும்.

அதற்காக 6 எலுமிச்சைகளை பாதியாக வெட்டி பாத்திரத்தில் போட்டு, அதில் அரை லீற்றர் நீர் ஊற்ற வேண்டும். பின்னர் 3 நிமிடம் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து பின் இறக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும். பின்பு அந்நீரை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.

இவ்வாறு நாள்தோறும் எலுமிச்சை நீரை பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அத்துடன் எலுமிச்சையானது தோலிற்கு இளமையூட்டி புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.

Related posts

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பிளம்ஸ்

nathan

சுவையான ஆட்டுக் குடல் சூப்…

nathan

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

nathan

மணம் தரும்… நோயை விரட்டும் சீரகம்!

nathan

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்

nathan

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

nathan

உங்களுக்கு வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

nathan

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan