Other News

பிக் பாஸிலிருந்து வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வார நாள் எவிக்ஷன் நடந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது 100 நாட்கள் கடந்துவிட்டன.

அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, மற்றும் பிரதீப், ஐஷ், கண்ணா பாலா, பிராவோ, அக்‌ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்சன், விஜித்ரா ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

100 நாட்கள் கடந்தும், வெற்றியாளர் யார் என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலையில் நிகழ்ச்சி தொடர்கிறது.

 

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் முடிவடையும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வெளியேறிய பழைய போட்டியாளர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மிட் வீக் எவிக்ஷன் நடைபெறுகின்றது. இதற்காக 6 போட்டியாளர்களையும் ஆறு அறைக்குள் பிக் பாஸ் அனுப்பியுள்ளார். இதில் யாருடைய அறையின் கதவு திறக்கப்படவில்லையோ அவர்கள் எவிக்ட் ஆவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

ஆனால் நேற்றைய தினமே பிக் பாஸ் மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button