30.5 C
Chennai
Thursday, Jun 5, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

ld785*  வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு  தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*  கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து  காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது  நிற்கும்.

*  வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின்  தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

*  கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி  தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

*  நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

*  ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி  ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

*  காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி  தேய்த்துவர முடி கருமையாகும்.

*  அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து  கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

*  மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு  தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

இவையனைத்தையும் செஞ்சுப்பாருங்க! பூரிச்சுப் போவிங்க!!

Related posts

பளபளப்பான தலைமுடி வேண்டுமா? பயன்படுத்தி பாருங்க!

nathan

நரை முடி கருக்க tips

nathan

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுனா வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி பாதிப்பை தடுக்க இத செய்யுங்கள்!…

sangika

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சின்ன வெங்காயம் !….

sangika

முடி வளர சித்த மருத்துவம்

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan