சமையல் குறிப்புகள்

உடுப்பி சாம்பார்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

Related Articles

* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* புளிச்சாறு – 2-3 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

பருப்பு வேக வைப்பதற்கு…

* துவரம் பருப்பு – 1 கப்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 3 கப்

சாம்பார் மசாலாவிற்கு…

* வரமிளகாய் – 6-8

* மல்லி விதை – 5 டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

சாம்பாருக்கான காய்கறிகள்…

* கேரட் – 1 (நறுக்கியது)

* வெண்டைக்காய் – 4 (நறுக்கியது)

* உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)

* மஞ்சள் பூசணி – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* புடலங்காய் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* கத்திரிக்காய் – 3 (நறுக்கியது)

* பீன்ஸ் – 5 (நறுக்கியது)

தாளிப்பதற்கு…

* எண்ணெய்/நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவி குக்கரில் போட்டு, 3 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு, குறைவான தீயில் வைத்து ஒரு 5 நிமிடம் வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் சாம்பார் மசாலாவை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாம்பார் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Udupi Sambar Recipe In Tamil
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் நீரை ஊற்றி வாணலியை மூடி 10 நிமிடம் காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், வேக வைத்துள்ள பருப்பு, அரைத்த சாம்பார் மசாலா, சர்க்கரை மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், உடுப்பி சாம்பார் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button