30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
3 bath 1650540751
ஆரோக்கியம் குறிப்புகள்

குளித்து முடித்ததும் ஏன் ஒருவருக்கு வியர்க்கிறது தெரியுமா?

நாம் பொதுவாக வியர்வை அதிகமாக இருக்கும்போது குளிப்போம். ஆனால், சிலருக்கு குளித்தவுடன் வியர்வை அதிகமாக வெளியேறும். ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால், ஏன் இந்த கட்டுரையில் கண்டுபிடிக்கவும். பொதுவாக வியர்ப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். நன்றாகக் குளித்த பிறகு ஏன் வியர்வைஅது நிச்சயமாக உங்களை கோபப்படுத்தும்.

வெந்நீரில் குளித்தால், இந்த வியர்வை பிரச்சனை தவிர்க்க முடியாதது. ஏனென்றால், வெந்நீரில் ஊறவைத்தாலும் உங்கள் சருமமும் கூந்தலும் சூடாக இருக்கும். கூடுதலாக, நீராவியிலிருந்து வரும் நீராவி குளியலறையில் வெப்பநிலையை உயர்த்துகிறது, இதனால் நீங்கள் சூடாக உணர்கிறீர்கள். உடல் வெப்பநிலை கூட உயரும்,

உடலை குளிர்விக்கவும்
ஒருவர் அதிகம் வியர்த்தால், உடனே குளிக்க வேண்டுமென விரும்புவோம். ஆனால் உடற்பயிற்சி செய்து வியர்த்திருந்தால், 25-30 நிமிடம் கழித்தே குளிக்க செல்ல வேண்டும். இது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுவதோடு, வியர்வையையும் குறைக்க உதவும்.

எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா? எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

குளித்த பின் அதிகம் வியர்க்கிறதா? அப்படியானால் சுடுநீரில் குளியலை முடித்த பின்னர், இறுதியில் ஒரு கப் குளிர்ந்த நீரால் உடலை அலசுங்கள். இதனால் உடல் வெப்பநிலை குறைந்து, குளித்த பின் ஏற்படும் வியர்வையைக் குறைக்கலாம்.

ஆண்களே! உங்க அக்குள் பகுதி கருப்பா இல்லாமலும் துர்நாற்றம் இன்றியும் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்! ஆண்களே! உங்க அக்குள் பகுதி கருப்பா இல்லாமலும் துர்நாற்றம் இன்றியும் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!

குளிர்ந்த நீரால் முடியை அலசவும்

ம்
சுடுநீர் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பையும் சூடேற்றும். எனவே தலைக்கு எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும். அதுவும் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசிய பின்னர் மிகுந்த புத்துணர்ச்சியை உணரலாம். அதோடு, தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்த உடனே ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்க அக்குள் பகுதி கருப்பா இருக்கா? துர்நாற்றம் வீசுதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்…!உங்க அக்குள் பகுதி கருப்பா இருக்கா? துர்நாற்றம் வீசுதா? அப்ப இத பண்ணுங்க சரியாகிடும்…!

சீக்கிரம் குளித்துவிட வேண்டும்

சிலர் மணிக்கணக்கில் குளியலறையில் நேரத்தை செலவழிப்பார்கள். குளித்த பின்னர் வியர்ப்பதற்கு குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதும் ஓர் காரணம். எனவே எவ்வளவு சீக்கிரம் குளித்துவிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வர முயலுங்கள்.

தொட்டு உலர்த்தவும்

குளித்து முடித்த பின்னர் டவல் கொண்டு உடலை தேய்த்து துடைத்தால், அந்த உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து, வியர்க்க வைக்கும். எனவே எப்போதும் குளித்து முடித்த பின் டவல் கொண்டு ஒத்தி எடுங்கள். அதுவும் கோடைக்காலத்தில், குளித்து முடித்து உடலை துணியால் ஒத்தி எடுத்த பின்னர் டால்கம் பவுடரைப் பயன்படுத்தினால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

குளியலறையில் ஆடைகளை மாற்றுவதைத் தவிர்க்கவும்

பெரும்பாலான மக்கள் குளித்து முடித்த பின்னர் குளியலறையிலேயே தங்களின் ஆடைகளை அணிந்து கொண்டு வருவார்கள். இப்படி குளியலறையில் நீண்ட நேரம் ஈரப்பதமான சூழ்நிலையில் இருந்தால், அது அதிகப்படியான வியர்வைக்கு வழிவகுக்கும். எனவே இதைத் தவிர்க்க, குளித்து முடித்ததும் படுக்கை அறைக்கு வந்து உடையை மாற்றும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

Related posts

தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்

nathan

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த 5 ராசி பெண்கள் இயற்கையாகவே அழகாக பிறந்தவர்களாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? ஆண்கள் படிக்க வேண்டாம்!!

nathan

மஞ்சள் இஞ்சி மகிமை!

nathan

இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைந்துவிடும்!..

sangika

உங்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியாதா?

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan