31.7 C
Chennai
Sunday, May 18, 2025
father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

nathan

​சியா விதைகள் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

pongal wishes in tamil

nathan

எப்பவும் உங்க மூஞ்சில எண்ணெய் வடியுதா?

nathan

கேப்டன் விஜயகாந்த் சினிமா வாய்ப்புக்காக முதல் போட்டோஷூட்

nathan

செவ்வாய் புஷ்ய யோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நீங்க தான் கோடீஸ்வரன்!

nathan

84 வருட திருமண வாழ்க்கை தம்பதிகள்

nathan

பிரா போடாமல் அதுவரை ஓப்பனாக விட்ட மிருனாள் தாக்கூர்…

nathan

அமலா பால் இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்!

nathan