30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

மார்ச் மாதம் தொழிலில் அசுர வளர்ச்சியடைய போகும் ராசியினர்…

nathan

நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

ரட்சிதா கொடுத்த பேட்டி – வைரலாகும் வீடியோ

nathan

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

சற்றுமுன் லாகூர் விமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு

nathan

பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை

nathan

வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… லொட்டரியில் பெருந்தொகை வென்று சாதனை

nathan

ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!விவாகரத்து ஏன்..?

nathan

சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி

nathan