30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப்! இந்த முடிவு நியாயமற்றது

nathan

விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அஜித் மகன்

nathan

ரித்திகா சிங் அப்படி ஒரு உடையில் பயிற்சி.. வீடியோ

nathan

கணவர் விக்கி உடன் சாலையில் நடந்து சென்ற நயன்தாரா

nathan

15.06.2024 இன்றைய ராசிபலன் –

nathan

மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே..

nathan

HONEYMOON சென்ற நடிகை சினேகா ! புகைப்படங்கள்

nathan

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!!

nathan

இன்ஜினியரிங் படித்த ஒருவர் என்ஜினீயர் மீன், கறி விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம்-

nathan