ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் வேலைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?தெரிஞ்சிக்கங்க…

என்னுடைய பாஸ் என்னைப் பார்த்து, ‘இது நீங்கள் வீட்டுக்குப் போகும் நேரம் தானே?’ என்று கேட்டது என் நினைவுக்கு வருகிறது. ஆனால், அந்த கேள்வியை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள மறந்ததால், பசி நோயால் பாதிக்கப்பட்டு 2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன்! நீங்களும் என்னைப் போலவே வேலைக்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்பவரா?

அப்படியெனில், இதோ இந்த கட்டுரையில் நீங்களும் வேலைக்கு அடிமையாகி விட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள உதவும் 8 அறிகுறிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

குடும்பத்துடன் செலவிடும் நேரம் ஜீரோ

குடும்ப உறுப்பினர்களை நீங்கள் புறக்கணிப்பதாக, அவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். அதற்கு நீங்கள் கடுமையான வேலைப்பளுவில் இருப்பதாகவும், வேலையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டாக நெடுநேரம் வேலை செய்வதாகவும் பதில் சொல்லியிருப்பீர்கள். ஆனால், அதனால் குடும்ப நிகழ்வுகளையும், மனைவியுடன் செலவிடும் நேரத்தை முழுமையாகவும் இழந்திருப்பீர்கள்.

இந்த போதையை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது!

ஆம், அதிகபட்ச வேலையும் ஒருவகையான போதைப்பழக்கம் தான். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் (பெட்ரூம் டூ பாத்ரூம்) நீங்கள் இமெயில்களை செக் பண்ணிக் கொண்டிருந்தால், அது எச்சரிக்கைக்கான மணி! பிரபல உளவியல் நிபுணரான பிரையன் இராபின்சன் என்பவர் எழுதிய ‘மேஜையுடன் கட்டப்பட்டுள்ளது’ என்ற தலைப்பிட்ட நூலில், வேலை உங்களை முழுவதுமாக விழுங்கி விட்டு, கட்டுப்பாடற்றதாகி விடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வேலைக்கு இல்ல ரெட் சிக்னல்

நீங்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அலுவலகத்துடன் எவ்வளவு அதிக நேரம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதில் தான் பிரச்சனை உள்ளது. உங்களுயைட மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் நீங்கள் சுவிட்ச் செய்வதைப் பற்றி எப்பொழுதும் யோசித்திருக்க மாட்டீர்கள். அலுவலகத்தின் ஒரு கிளையாக உங்களுடைய இல்லம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், உங்களுடன் பணிபுரிபவர்களுக்கு, அதுவும் மேலாளராக இருக்கும் வேளைகளில், ஒரு மோசமான முன்னுதாரணத்தைத் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள்.

வேலை-வாழ்க்கை சமநிலை எங்கும் இல்லையே!

இது ஒரு சவால். நீங்கள் வேலையை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறீர்கள். அது ஒரு பெரிய யானையை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு ஒப்பாகும். மன அழுத்தம் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும் உங்களுடைய நரம்புகளை நெருக்கியடிக்கத் துவங்கியிருக்கும். அதனால் உங்களுடைய வேலை-வாழ்க்கை சமநிலை அழிந்திருக்கும்.

தூக்கம் எங்கே?!

உங்களுடைய போனுக்கு மேல் படுத்து தூங்குவீர்கள் என்பதை மறுக்க இயலாது. கண்ணுக்கு முன்னால், கணிணியின் நீல நிற ஒளி வந்து வந்து, நீங்கள் விழித்திருக்கும் நேரத்தை சரிக்கட்டியான பின்னர், உறக்கம் விடுமுறையில் போய்விடும் என்பதை சொல்லவும் வேண்டுமா! இங்கே நீண்ட, ஓய்வளிக்கும் உறக்கம் என்பது பழைய வரலாறு ஆகி விட்டது எலக்ட்ரானிக் சாதனங்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வெறுமனே நேரம் கழிப்பதன் மூலம் உறக்கத்தை வரவழைக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதை விட்டு விட்டு, தூக்கம் வரவில்லை, அதனால் தான் கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நம்மை நாமே சமாதானம் செய்வது சரியல்ல.

விடுமுறைக்கு விடுமுறை!

ஆம், வேலை வேலை என்று சுற்றும் நீங்கள் விடுமுறை எடுத்து பல வருடங்கள் ஆகியிருக்கலாம். வேலை செய்வதை மறக்க முடியாத ஒரு பரிதாபமான நிலையையே இது குறிக்கும். அதையும் மீறி, நானும் இன்னைக்கு லீவு-என்று வரும் நாட்களிலும் மொபைலை கவனித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய வேலையை மற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க முடியாததையும் கூட இந்த பிரச்சனையின் ஒரு பகுதியாகச் சொல்ல முடியும். குழுவின் இதர உறுப்பினர்களுடன் வேலையை பிரித்துக் கொடுத்து, வேலை செய்யக் கற்றுக் கொண்டால், வேலையும் நடக்கும், நீங்களும் ஓய்வாக இருக்க முடியும்.

ஆரோக்கியக் குறைபாடுகளைப் பற்றி தெரியாது
ஆரோக்கியக் குறைபாடுகளைப் பற்றி தெரியாது
விரைவில் அல்லது பின்நாளில் நீங்கள் உடல் ரீதியாக சுகாதார பிரச்சனைகளை சந்திக்கவிருப்பீர்கள். வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் சில கீழே தரப்பட்டுள்ளன:

* இதய நோய்

* போதைப்பழக்கம்

* பயம்

* எடை தொடர்பான பிரச்சனைகள்

* உறக்கமின்மை

சமூக நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல்
சமூக நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல்
குடும்பம் அல்லது நண்பர்களுடன் நடக்கும் சமூக நிகழ்ச்சிகள் உங்களுடைய பட்டியலில் இருந்து என்றோ விடை பெற்றுச் சென்றிருக்கும். தப்பித்தவறி அது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்று விட்டால், நெளிந்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் வேலைக்கு அடிமையாகி விட்டதால், இந்த வாழ்க்கை முறையால் நீங்கள் திருப்தியடைவதும் இல்லை மற்றும் பலன் பெறுவதும் இல்லை.

மேற்கண்ட விஷயங்கள் உங்கள் காதுக்குள் ரீங்காரமிடுகின்றனவா? இவ்வளவு தூரம் வேலை வேலை என்று நீங்கள் இருந்தாலும் கூட, இந்த வேலை அடிமைத்தனத்தின் காரணமாக உங்களுடைய பணி வாழ்க்கைக்கு பிரச்சனையைத் தான் நீங்கள் விளைவிக்கிறீர்கள் என்பது தெரியுமா? ஏனெனில், வேலை செய்து தளர்ச்சியுற்று இருக்கும் ஒரு நபர், தவறுகள் செய்யவும், மோசமான முடிவுகளை எடுக்கவும், உடன் பணிபுரிபவர்களுடன் இருக்கும் சுமூக உறவை கெடுத்துக் கொள்ளவும் செய்வார் என்பது உண்மை. எனவே, நீங்கள் திரும்பி வருவதற்கான காலடியை வைக்க வேண்டிய நேரம் இது. முதலில், இந்த பிரச்சனை உங்களுக்கு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button