ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் அதிகமாக குளிர்பானங்களை பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பொதுவாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் சோடா பானங்கள் மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை பருகி வருவதால் உடலில் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும்.

இதனால், பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும் பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது.

Related posts

ஓமம் பயன்படுத்தும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா 2 முதல் 3 கப் காஃபி பெண்களில் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும்!

nathan

நீங்கள் அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா ?அப்ப உடனே இத படிங்க…

nathan

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

7 நாட்களில் தொப்பையை குறைக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்!

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும்!

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? – அதிர்ச்சி!!!

nathan