ஆரோக்கியம் குறிப்புகள்

எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. எலுமிச்சை சாறு குடித்தால் எவ்வளவு சோர்வாகவும் களைப்பாகவும் இருந்தாலும் உடனடியாக ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகாக எலுமிச்சை பயன்படுத்துகிறோம்.

காலை நேரத்தில் குடிப்பதற்கான சிறந்த பானமாகப் பரிந்துரைக்கப்படுகிறது எலுமிச்சை தண்ணீர். இதை சர்க்கரை சேர்க்காமல் மெல்லிய புளிப்பு சுவையோடு சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் நமக்குக் கடைக்கும் பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

 

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. மேலும் எலுமிச்சை சாறு கொடுக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நன்மைகள்:-

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்யும். உடல் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கும் போது எலுமிச்சை சாறு குடித்தால் உடனடியாக புத்துணர்ச்சி தரும்.

எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.

எலுமிச்சை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை சரிசெய்யும்.

இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல தூக்கத்தை தரும். எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button