ஆரோக்கிய உணவு

பூண்டை அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சாப்பிடும் உணவுகள் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தாகி விடும்.

அவ்வாறு பல மருத்தவ குணங்களைக் கொண்ட பூண்டினை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அதிக அளவு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

இரத்தத்தை நீர்க்க செய்யும் (Blood Thinner) பண்புகளைக் கொண்டது தான் பூண்டு. ஆகையால் பூண்டை அதிகமாக உண்கொண்டால் ரத்தப்போக்கு பிரச்சினை ஏற்படலாம். மேலும் அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இது ஆபத்தில் முடியும்.
பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், கல்லீரலில் நச்சுக்களின் அளவு அதிகரிப்பதுடன், கல்லீரலையும் பாதிக்கின்றது. ஆகவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மேலும் பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button