27.2 C
Chennai
Saturday, Oct 26, 2024
1 156
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா?

ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் கடினமான பணியாகும். குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையாகவும், வீக்கம், சிவத்தல், அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சனைகளுக்கு ஆளாகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளை எளிய பொருட்கள் மூலம் குணப்படுத்தலாம். இது தேங்காய் எண்ணெய் தவிர வேறில்லை. உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் என்ன செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பாருங்கள்.

குழந்தைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும்?
குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலத்தின் காரணமாக அதில் அதிகளவு ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதுடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் ஈரப்பதமான சருமத்தை வழங்குகிறது.

முடிக்கான பயன்கள்

தேங்காய் எண்ணெய் அனைத்து முடி வகைகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக உபயோகிப்பவர்களுக்கு அடர்த்தியான, கருமையான, வலிமையான கூந்தல் இருக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்வது அவர்களுக்கு முடி வளர்ச்சியை தூண்டுவது, ஈரப்பதமான பளபளப்பான முடி, வறட்சியற்ற தலை போன்ற பலன்களை வழங்குகிறது. அதிகப்படியான பலன்களுக்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடு பண்ணி தேய்க்கவும்.

மென்மையான சருமம்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை ஈரப்பதமூட்டிகளில் ஒன்றாகும். உங்கள் குழந்தையின் வறண்ட சருமத்தின் மீது இது பல அற்புதங்களை நிகழ்த்தும். உங்கள் குழந்தையின் லோஷன்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்த தொடங்குங்கள். அதன்பின் மாற்றத்தை கவனியுங்கள்.

 

தடிப்புகள்

டயபர்களால் ஏற்படும் தடிப்புகள் மற்றும் அலர்ஜிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். தடிப்பு இருக்கும் இடத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக தடவுங்கள்.

பருக்கள்

குழந்தைகளுக்கு அடிக்கடி பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் கிருமிநாசினி குணங்களும், ஆன்டிபாக்டீரியா குணங்களும் குழந்தைகளின் பருக்களை குணப்படுத்துவதோடு அதனால் ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

தீக்காயங்களை குணப்படுத்தும்

தீக்காயங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். தொடர்ச்சியான பயன்பாடு தீக்காயத்தை குணப்படுத்தும் மற்றும் வடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

தோல் அழற்சி

சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்த தேங்காய் எண்ணெய்தான் சிறந்த வழியாகும். எக்சிமா நோயால் ஏற்படும் காயங்கள் வலி மற்றும் அரிப்பை உருவாக்கும். இதனை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள இயலாது. இது பெரும்பாலும் முழங்கை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் ஏற்படும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் குணப்படுத்தும் குணங்கள் எந்த பக்க விளைவுகளும் இன்றி இதனை குணப்படுத்தும்.

 

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவை குழந்தைகளுக்கு பொதுவாக அதிகம் ஏற்படும் நோய்களாகும். முன்கை மற்றும் மணிக்கட்டில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழதைகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.

Related posts

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! முயன்று பாருங்கள்

nathan

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன!….

sangika

இந்த 4 ராசிக்காரர்கள் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லதாம்

nathan

ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்

nathan

பெற்றோர்களே…குழந்தைகளிடம் கத்துவதற்கு முன்னால் இதை சிந்தியுங்கள்

nathan

இரவில் பால் குடிக்கலாமா..?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன…?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்…

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்:-

nathan