29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பிராய்லர் கோழிகளை தொடர்ந்து உண்ணுகிற ஒருவர் நோய்வாய்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும்போது அவருக்கு சில முக்கிய ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்வதில்லை

பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஊசிகள் அனைத்தும் ரசாயனங்களால் ஆனது.

பிராய்லர் கோழிகளுக்கு சராசரியாக 12 வகையான ரசாயனங்கள் தரப்படுகிறது. உணவுகள் மூலமும் நேரடியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்காக வளர்கிற கோழிகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்காகவும், 40 நாட்களிேலயே அதிக எடையுடன் வளர்வதற்காகவும் இதுபோன்ற மருந்துகள் செலுத்தப்படுகிறது. இதனால் அந்த கோழிகள் குறைந்த நாளில் அதிக எடையுடனும் இருக்கிறது. இதற்காக பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகளும் போடப்படுகிறது.

இவ்வாறு தயாராகும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து உண்ணுகிற ஒருவர் நோய்வாய்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும்போது அவருக்கு சில முக்கிய ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்வதில்லை. இதற்கு காரணம் பிராய்லர் கோழிகளில் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் இருப்பதே காரணம்.

ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தி குறைந்து ஆண்மை குறைவு ஏற்பட காரணமாகிறது. பெண்களுக்கு கருமுட்டை பாதிப்படைந்து குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய்களை உண்டு பண்ணக்கூடிய கூறுகள் பிராய்லர் கோழியில் இருக்கிறது என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிராய்லர் கோழி தொடர்ந்து உண்டு வந்தால் அதில் உள்ள ஹார்மோன் ரசாயனங்கள் அந்த பெண் குழந்தை சிறு வயதிலயே பூப்படைய காரணமாக இருக்கிறது.

பிராய்லர் கோழி அதிக அளவு கொழுப்பு நிறைந்தவையாகவும் இருக்கிறது. இதனை உட்கொள்ளும்போது சிறுநீரகத்தில் அதிகமான கெட்ட கொழுப்பு படிகிறது. மேலும் கல்லீரல் வீக்க நோயும் ஏற்படுகிறது. அதோடு மஞ்சள் காமாலை நோயும் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

பிராய்லர் கோழிகளில் உள்ள கொழுப்பு ரத்த நாளங்கள் அடைப்பு ஏற்படுத்தி ரத்த அழுத்த நோய் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது. பிராய்லர் கோழிகள் உட்கொள்ளும் நூறுபேரில் 65 நபருக்கு ரத்த அழுத்தம் நோய் ஏற்படுகிறது.
குடல், இரைப்பை, கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக பிராய்லர் இறைச்சி உள்ளது. வளரும் குழந்தைகள் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது அவர்களுக்கு எலும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பிராய்லர் கோழிகள் தைராய்டு போன்ற நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

வெளியிடங்களில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பிராய்லர் கோழி வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி, மீன் போன்ற உணவுகளை எந்த அளவு இயற்கையானது. அது வளர்க்கப்படும் சூழல் போன்றவற்றை கவனத்தில் கொண்டு பார்த்து உண்ணலாம்.’’

Related posts

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு

nathan

உள்ளாடை அணியும் போது கவனிக்க வேண்டியவை…..

sangika

சூப்பர் டிப்ஸ்! காய்கறிகள் வாடாமல் இருக்க இப்படி செய்யுங்கள்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா??

nathan