27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
6093a1257048b
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

 

ஆன்மீக சுவையான சட்டத்தின்படி, உங்கள் வீட்டுப் பணச் சேமிப்பில் சில பொருட்களை வைக்கும்போது அதிக பணம் குவிகிறது.

மஹாலக்ஷ்மி எப்போதும் நல்ல மணம் வீசும் இடத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது.

இதுபோன்ற பல நறுமண பொருட்கள் உள்ளன. ஆனால் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை பெட்டகத்தில் வைத்திருந்தால், அதிக பணம் கிடைக்கும். இப்போது அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பச்சை கற்பூரம்

நம் அனைவருமே பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவ்வளவு பணம் சேர்கிறதே அது எப்படி தெரியுமா? திருப்பதியில் கொடுக்கப்படும் லட்டு, தீர்த்தம் என அனைத்திலுமே பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகிறது.

இந்த காரணத்தினால் கூட அங்கு பணம் சேரலாம் என்றும் கூறப்படுகிறது

மாதுளை குச்சி மற்றும் மல்லிகை

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை வீட்டின் தென்மேற்கு திசையில், வடக்கு திசையை நோக்கி வைப்பது மிகவும் நல்லது. அதோடு நீங்கள் பணம் வைக்கும் போது, அத்துடன் ஒரு சிறிய துண்டு மாதுளை குச்சியையும் வையுங்கள்.

அதனுடன் சிறிது மணம் நிறைந்த மல்லிகை பூவையும் வையுங்கள்.

மல்லிகை

பூக்களில் மிகவும் வாசனை நிறைந்த பூ என்றால் அது மல்லிகை தான். நல்ல மணமுள்ள மல்லிகைப் பூ மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும்.

இந்த மல்லிகையை பணத்துடன் சேர்த்து வைக்கும் போது, அங்கு பணம் குறையாமல் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

மாதுளை குச்சி

மாதுளையின் குச்சி மகாலட்சுமி அம்சம் பொருந்தியது என்று கூறுவார்கள்.

எனவே மாதுளை மரத்தில் இருந்து சிறு குச்சியை உடைத்து வந்து, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள் .இதனால் பணம் வைக்கும் இடத்தில் பணம் பெருகும் சக்தி அதிகரிக்கும்.

மாதுளை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

உங்கள் வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், மாதுளை மரத்தை வளர்ப்பது நல்லது.

அதேப் போல் நெல்லிக்காய் மரத்தையும் வளர்ப்பது மிகவும் நல்லது. இரண்டு இரண்டு மரங்களிலும் மகாலட்சுமி குடியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

மாதுளை ஒருவரது உடலில் இரத்த அளவை அதிகரிக்கக்கூடியது மட்டுமல்ல, நம் வீட்டில் பணச் சேர்க்கையையும் அதிகரிக்க கூடியது என்று கூறலாம்.

நகை அதிகம் சேர வேண்டுமா?

மாதுளை குச்சி பணம் அதிகம் சேர மட்டுமின்றி, நகைகளையும் அதிகம் சேர வைக்கும். அதற்கு நீங்கள் நகை வைக்கும் பெட்டியில் மாதுளை குச்சியை மட்டும் வையுங்கள்.

இதனால் நகை அதிகம் சேர்வதோடு, நகைகளை விற்கும் நிலைமை வராது. அந்த அளவிற்கு மாதுளை குச்சிக்கு தெய்வீக சக்தி உள்ளது.

எனவே இவற்றை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள், நிச்சயம் நல்ல பலனைத் தரும்.3

Related posts

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

nathan

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

nathan

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..

nathan

உங்களுக்கு தெரியுமா புதிதாக தாயான பெண் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்ன?

nathan

இதோ எளிய நிவாரணம்! குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டுமுறை வைத்தியம்…

nathan

தினமும் 5 ஆலிவ் சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

நீங்கள் இருட்டான அறையில் தூங்குபவரா ? அப்ப இத படியுங்க!

nathan