32.2 C
Chennai
Monday, May 20, 2024
s5 11 1452513809
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வீடு கலகலப்பாக உற்சாகமாக தான் இருக்கும். ஆனால் அவர்களே ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டு கொண்டு அழுது கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கும்? குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தை வளத்துக்கொண்டால் பிற்காலத்திலும் இதே கோபம் நிலைக்க வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

1. இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்

நீங்கள் இளைய பிள்ளை வந்த உடன் இளைய பிள்ளையை மட்டுமே அதிகமாக கவனித்துக்கொண்டு இருப்பீர்கள். அது உங்கள் மூத்த பிள்ளைக்கு வருத்தத்தை தரலாம். எனவே இரு பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிடுங்கள். மூத்த குழந்தை ஒரளவு வளர்ந்திருந்தால், அந்த குழந்தைக்கு என சில வேலைகள் இருக்கும். எனவே இளைய பிள்ளை அளவுக்கு நேரம் செலவிட வேண்டி வராது. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தை மூத்த பிள்ளைக்காக செலவிடுவது நல்லது.

2. ஒப்பிட்டு பேச வேண்டாம்

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் விளையாட்டாக கூட ஒப்பிட்டு பேச வேண்டாம். இது ஒருவர் மீது ஒருவருக்கு கோபத்தை உண்டாக்கும்.

3. பாசத்தை அதிகப்படுத்துங்கள்

உங்களது இரு பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசத்தை அதிகப்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும். எனவே உன் மீது அக்கா / அண்ணன் நிறைய பாசம் வைத்து இருக்கிறான். உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான். நீ எதுவானாலும் அவனிடம் கேள் என்பது போன்ற வார்த்தைகளை கூறி இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க வேண்டியது உங்களது கடமை.

4. சரிசமமாக செய்யுங்கள்

உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் எது செய்தாலும் சரிசமமாக செய்வது அவசியம். ஒருவருக்கு குறைவாகவும், ஒருவருக்கு அதிகமாகவும் செய்வது நீங்களே அவர்களுக்குள் சண்டையை உண்டாக்குவது போன்றதாகும்.

5. இன்னும் சண்டை போடுகிறார்களா?

இதை எல்லாம் செய்தும் கூட இன்னும் சண்டை போடுகிறார்கள் என்றால், கட்டாயம் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும். அது என்னவென்று தெரிந்து அதை சரி செய்ய தவறாதீர்கள்.

குழந்தைகளை ஒப்பிட்டு பேசுதல், ஒருவரை அதிகமாகவும் மற்றொருவரை குறைவாகவும் பார்ப்பது ஆகியவை பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் ஆகும். ஒரு ஆரோக்கியமான மனநிலையுடன் குழந்தை வளர இவற்றை எல்லாம் செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் திறமையை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆகியவை தான் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும்.

Related posts

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

nathan

உடல் எடை மற்றும் தாய்ப்பால் இரண்டிலும் ஏன் பெண்கள் கவனம் தர வேண்டும்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

nathan

அடேங்கப்பா! சுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

nathan

கவனமாக இருங்கள்.! செல்போன் கேம்களின் மோகத்தால் குழந்தைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

nathan

வேனல் கட்டி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

முடி 5 மடங்கு வேகமாக வளரனுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தினமும் காலையில் தண்ணீர் தேவையான அளவு தொடர்ந்து குடித்து வந்தால்…

nathan