30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி போட்டால் பாதிப்பா?

கொரோனா தடுப்பூசி குறித்து பாலூட்டும் பெண்களுக்கு பல சந்தேகம் நிலவி வருகின்றது.அதில் ஒன்று தான் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். அதில் அவர்கள் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். தற்போது அவற்றை பார்ப்போம்.

பாலூட்டும் தாய்மார் போட்டு கொள்ளலாம்?

பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.

ஆராய்ச்சி கூறுவது என்ன?

ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது என குறிப்பிட்டார்.

Related posts

ஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தோல் நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்

nathan

பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செல்லும் போது கவனிக்க வேண்டிவை

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் சதகுப்பை

nathan

தொிந்துகொள்ளுங்கள் ! அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது சோடா பருகினால் என்னவாகும் தெரியுமா?

nathan