Image 3 6
Other News

இனியும் அலட்சியம் காட்டாதீர்கள்! பெண்கள் கருத்தரிப்பதற்கு தாமதமாவது ஏன் தெரியுமா?..

பெரும்பாலான பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினைகளையே அதிகம் சந்திக்கிறார்கள்.

கருத்தரிக்காததற்கு அவர்களின் மலட்டுத் தன்மையே காரணம் என நம்பப்பட்டுவந்த நிலையில், தற்போது ஆண்மைக் குறைவுதான் அதிக காரணமாக உள்ளது.

கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ (Polyp) அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.

கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.

சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.

கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியும். கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனை களை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி…

* மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.

* மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.

* மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.

* மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.

கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல் (Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால் தான், உருவான கருவானது கருப்பையில் பதியும்.

இப்படி எல்லா வற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி (Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும்.

கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம். மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும்.

இதையடுத்து, ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்த பட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது.

அதற்கும் சிறப்பு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம். எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள்.

Related posts

இந்த 5 ராசி பெண்களுக்கு எதிலும் தோல்வியே கிடையாதாம்…

nathan

4 வயது சிறுமியை சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்..

nathan

சிகிச்சைக்கு பிறகு ஆசை மகனுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan

படுத்த படுக்கையாக இருந்த ரோபோ சங்கரா இது?

nathan

கணவர் சினேகன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி கன்னிகா

nathan

சுவரேறி குதித்து காதலனைத் திருமணம் செய்த இளம்பெண்..அப்பகுதியில் பரபரப்பு

nathan

முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா..

nathan