26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
625.500.560.350.160.300.053 1
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… நீங்கள் பிறந்தகிழமை இதுவா ?? அப்போ உங்க பிறவி குணம் இது தான் !!

ஒரு மனிதனின் குணம் என்பது அவரின் வாழ்க்கைக்கு முகவும் இன்றியமையாத ஒன்றாகும்.அவரின் குணநலன்களை பொறுத்தே அவருக்கு இன்ப துன்பங்கள் அமையும்.

அப்படி ஒருவரின் குனநலன்களை அவர்களின் ஜாதகம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.அதுபோல, ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி ஜோதிடம் மூலம் அறிய பிறந்த திகதி பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது.

ஒருவரது பிறந்த கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

கிழமைகளும் பலன்களும் :
ஞாயிற்றுக்கிழமை :
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

திங்கட்கிழமை :
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய்கிழமை :
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள்.

தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

புதன்கிழமை :
புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர்.

நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

வியாழக்கிழமை :
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்.

அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

சனிக்கிழமை :
சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள்.

பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்

Related posts

பல வருடங்கள் ஆனாலும் பட்டுப்புடவை பளபளன்னு மின்ன வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆக்கத்திறன் கொண்டவர்கள் பின்பற்றும் 9 வெற்றி ரகசியங்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? இனி சாப்பிட்ட பின்பு மறந்து கூட இந்த 6 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த பழங்களை அன்றாடம் சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்..சில சமையலுக்கு பயன்தரும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்….! !!

nathan

30 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து அதிசயிக்கத்தக்க வகையில் மாறிய நால்வர்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan