30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

அதில் நாம் தேர்வு செய்திருப்பது தேங்காய் எண்ணெய் சோப்பு. தேங்காய் எண்ணை உடலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் அதனால் இதை பயன்படுத்து சோப்பு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் 1லிற்றர் (செக்கு எண்ணை சிறந்தது)
காஸ்டிக் சோடா – 135கிராம் (சோப்பு கட்டியாக்கும் தன்மை கொண்டது)
தண்ணீர் -370மில்லி லிற்றர் ( சுத்தமான குடிநீர்)
வாசனை திரவியம் -15 மில்லி லிற்றர் (மணம் சேர்க்கும் திரவியம்)
தயாரிப்புமுறை

பாதுகாப்பு அணிகலன்கள் அணிந்து கொண்டு தண்ணீர் 370மில்லி எடுத்து ஒரு கடினமான பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு 135கிராம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அதனை மெல்ல மரக்குச்சியால் நன்றாக கலக்கி விடவும். சிறிது நேரத்தில் வேதியல் வினை புரிந்து சூடாகும். அந்த நேரத்தில் வெளியாகும் வாயுவை சுவாசிக்க கூடாது.

அதன்பின் நிறம் வெண்மையாக மாறி இருக்கும். அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும். 10 அல்லது 15 நிமிடம் சென்ற பிறகு மீண்டும் தண்ணீரின் நிறத்தில் மாறிவிடும்.

அதன்பின் தேங்காய் எண்ணெய்யை சில்வர் பாத்திரம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து அதனுடன் முன்னர் தயார் செய்து வைத்த சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை சேர்ந்து கலக்கி கொண்டே இருக்கவும்.

தொடர்ந்து கலக்கும் போது எண்ணெயின் தன்மை மாறும். அது பசைபோல் மாறுவரை தொடர்ந்து கலக்கவும்.

பின் பசை தன்மை அடைந்ததும் பாத்திரத்தை மூடி நன்றாக வேக விடவும். முன்பை விட மேலும் இறுகி இருக்கும். இதற்கு பாத்திரத்தின் தன்மை, வெப்பநிலை பொறுத்து நேரம் மாறுபடும். 45நிமிடம் முதல் 1.30மணி நேரம் ஆகலாம்.

அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டும். எண்ணெய் துளிகள் தனித்து தெரியாமல் இருக்கும் அளவில் கலந்திருக்க வேண்டும். பின் PH பேப்பரில் 7-10 இருக்கும் அளவில் நிறம் மாறுகிறதா என்று சோதனை செய்ய வேண்டும். PHஅளவு 10க்கு மேல் இருந்தாலோ அல்லது பிசு பிசு என இந்தாலோ மீண்டும் வேக வைக்க வேண்டும். முழுவதும் சோப்பு பசையாக மாறிவிட்டதா என்று பார்ப்பது மிகவும் அவசியம்.

அந்த கலவையில், வாசனை திரவியம் தேவையான அளவில் சொட்டு சொட்டாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதன்பின் விரும்பிய வடிவத்தில் அச்சு தயாரித்து அனுள் பட்டர் பேப்பர் போட்டு கலவையை கொட்டி சமமாக பரப்பி விடவும்.

ஒருநாள் முழுவதும் அப்படியே இறுகவிட்டு அடுத்த நாள் எடுத்து தேவையாக அளவு துண்டுகளாள வெட்டி மீண்டும் இரண்டு நாட்கள் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளலாம்.

இதேபோல் உங்களுக்கு விருப்பமான எண்ணெய் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கலாம்.

Related posts

மண்பானை தண்ணீர் ஏன்? ஜில்லென்று இருப்பது ஏன்?

nathan

நீங்க நல்ல பெஸ்ட் ஹஸ்பெண்ட்டா? 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா?

nathan

நீங்கள் சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

nathan

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

வெல்லத்தை உணவில் சேர்த்தால் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பல ஆயிரம் பெண்களுக்கு மாதவிடாயின்போது அடிப்படை வசதிகளே கிடைக்கப்பெறுவதில்லை. இதில் எங்கிருந்து மாதவிடாய் குறித்த விழிப்புணர்வெல்லாம்..?’

nathan

இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

sangika

ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

காதல்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடும் ராசிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan