முகப் பராமரிப்பு

Kadalai Maavu Beauty Tips in Tamil!!

கடலைமாவு + மஞ்சள்
2tsp கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். இந்த கலவை குளிர்ச்சியைத் தருவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை.

கடலைமாவு + தயிர்
2tsp கடலை மாவில் சிறிதளவு தயிர் விட்டு கெட்டியாக கலந்து முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் நல்ல பயன் இருக்கும். குளிக்கும் போதும் இந்த கலவையைப் பயன்படுத்தினால் சருமம் வழுவழுப்பாகும்.

கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய :
கடலை மாவு, கசகசா, பாதாம், துளசி இலை, ரோஜா இதழ் இந்த பொருள்களை நன்றாக சுத்தம் செய்து காய வைத்து பவுடராக்கி, பாலுடன் சேர்த்து தினமும் முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும். வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.
Gram flour for skin

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button