அழகு குறிப்புகள்

நடிகை சமந்தா வேறொருவருடன் தொடர்பு…. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை…

நடிகை சமந்தா கணவரை பிரிந்ததற்கு வேறொருவருடன் நெருக்கமாக இருந்ததால்… குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை… கருக்கலைப்பு செய்தார்… என்று பல தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2ம் தேதி பிரிவதாக சமந்தா உறுதி செய்தார். இதன் பின்பு இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமந்தா டுவிட்டரில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார். என் தனிப்பட்ட பிரச்சனையில் நீங்கள் காட்டிய அன்பை பார்த்து நெகிழ்ந்தேன். உங்களின் ஆதரவு, அக்கறை மற்றும் வதந்திகள், என்னை பற்றி பரப்பப்படும் கதைகளை நம்பாமல் இருப்பதற்கு நன்றி.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எனக்கு கள்ளத்தொடர்புகள் இருந்ததாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், நான் அபார்ஷன் செய்ததாகவும் கூறுகிறார்கள்.

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையாக விஷயம். நான் அதில் இருந்து மீண்டு வர அனுமதிக்காமல் தொடர்ந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லும் எதுவும் என்னை பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button