33.6 C
Chennai
Thursday, Jun 5, 2025
pain1
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்க இவற்றை செய்யுங்கள்!…

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் சூடான, சுவையான நெய்யில் உருட்டிய கடலை உருண்டை உண்டுபாருங்கள். அப்போ தெரியும்…

தேவையான பொருட்கள்

பச்சை நிலக்கடலை – 250 கிராம்

வெல்லம் – 250 கிராம்

நெய்-100 கிராம்

pain1

செய்முறை

250 கிராம் பச்சை நிலக்கடலையை வெறும் வாணலியில் நன்கு வறுக்க வேண்டும். பின்பு, அதனை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கும்போதே, மிதமான சூட்டில் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து, 250 கிராம் வெல்லத்தை பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். பின்பு, மிக்சியில் நிலக்கடலையையும் பொடித்த வெல்லத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும். இரண்டையும் சேர்த்து அரைத்தால்தான் உருண்டைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். வழுவழு என்று அரைக்கக் கூடாது.

அரைத்ததை எடுத்துக்கொண்டு, சிறிய, சிறிய உருண்டையாக நன்கு அழுத்திப் பிடித்து உருட்டவும். ஒருவேளை உருண்டை வரவில்லையென்றால், நெய்யை மிதமாக சூடேற்ற வேண்டும். பின்பு அந்த சூடான நெய்யில் மாவை சேர்த்து உருண்டைப் பிடிக்கவும்.

இதனை உண்பதால் ஏற்படும் பயன்கள்:

நிலக்கடலையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். இந்த நிலக்கடலையுடன் வெல்லத்தைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

மேலும், நிலக்கடலையை பச்சையாக சாப்பிடாமல், தண்ணீரில் சில மணிநேரம் ஊறவைத்து சாப்பிடும்போதுதான், நமக்கு முழுபலனும் கிடைக்கிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் இதை சாப்பிடலாம்.

Related posts

உடல் எடையை குறைக்க,,

nathan

மெலட்டோனின் சுரப்பை சீர் செய்தால் ஒருவர் நன்றாகத் தூங்க முடியும். மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டால் ஒருவரின் தூக்கம் கெடும்.

nathan

பெற்றோர்கலே தெரிஞ்சிக்கங்க… குழந்தைக்கு எப்படி நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தருவது?

nathan

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்!

nathan

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

sangika

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு பெண்களும் பூப்படையும் காலம் முதலே அறிந்து வைத்திருப்பது அவசியம்.

nathan

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan