30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

இயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். உணவை அதிக வெப்பத்தில் சமைப்பது, அதிக நீர் ஊற்றுவது, தவறான பொருட்களை சேர்ப்பது என சமைக்கும் போது நாம் செய்யும் தவறுகள் ஏராளம்.

இதனால்தான் பெரும்பாலான காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இருப்பினும் சில காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட முடியாது அந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியமான சமைக்கும் முறையை கையாள வேண்டும்.

இந்த பதிவில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கழுவும் முறை

காய்கறிகளை வெட்டி விட்டு அதன்பின் கழுவும் முறையை பலரும் பின்பற்றுகிறார்கள். இது மிகவும் தவறாகும். எப்போதும் உணவை கழுவி விட்டு அதன்பின் நறுக்குவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

ஏனெனில் நறுக்குவிட்டு கழுவும் போது நாம் பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.

சிறியதாக நறுக்காதீர்கள்

காய்களை எப்போதும் மிகச்சிறிய துண்டாகி நறுக்காதீர்கள். ஏனெனில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கும்போது காற்றுடன் அவை வினைபுரிவதால் நாம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.

எனவே எப்போதும் காய்கறிகளை பெரிய துண்டாக நறுக்கி சமையுங்கள்.

நீரின் அளவு

உணவை எப்பொழுதும் குறைவான தண்ணீரில் சமைக்க பழகுங்கள். ஏனெனில் அதிக தண்ணீரில் சமைப்பது பல ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது.

எனவே குறைந்த நீரில் குறைவான வெப்பத்தில் சமைப்பது நல்லது.

உணவை சூடு பண்ணுவது

உணவை சமைக்கும் போது அதிக வெப்பத்தில் சமைப்பது எப்படி தவறானதோ அதேபோல அந்த உணவை மீண்டும் சூடுப்படுத்துவது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை மேலும் சிதைக்கும்.

உடனடியாக சமைப்பது

காய்கறிகள் வெட்டிய உடனேயே சமைக்க தொடங்கி விடுங்கள், ஏனெனில் நீங்கள் தாமதமாக சமைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காற்றில் வினைபுரிந்து அதனை இழக்க நேரிடும்.

மீதமான தண்ணீர்

காய்கறிகள் மற்றும் அரிசியை சமைத்த பின்னர் மீதமிருக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள். ஏனெனில் இந்த தண்ணீரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

இந்த தண்ணீரை கொண்டு உணவை சமைப்பது உணவின் சுவையையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்.

வேர் காய்கறிகள்

பூமிக்குள் இருந்து கிடைக்கும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி போன்ற காய்கறிகளை எப்போதும் தோலுடன்தான் வேகவைக்க வேண்டும்

. ஏனெனில் காய்கறிகளை தோலுடன் வேகவைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துளை நீங்கள் இழக்க நேரிடாது.

பேக்கிங் சோடா

காய்கறிகளை சமைக்கும் போது அதில் பேக்கிங் சோடாவை சேர்க்காதீர்கள். இது காய்கறிகளின் நிறத்தை தக்கவைத்து கொள்ள உதவும், மேலும் சமையலின் செயல்முறை வேகத்தையும் அதிகரிக்கும்.

ஆனால் இது காய்கறிகளில் உள்ள வைட்டமின் சி-யை சிதைக்கும்.

சமைக்கும் நேரம்

நீண்ட நேரம் சமைக்கும் போதும், அதிக நேரம் சமைக்கும் போதும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது.

ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் மென்மையானவை, வெப்பம் அவற்றை எளிதில் அழித்துவிடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழம் பித்த நீர், மூல பிரச்சனைகளை குணப்படுத்துகிறதாம்..!

nathan

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! திருமணத்தில் இணையக்கூடாத ராசிகள்

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

சிவப்பு நிற பழங்களில் எவ்வளவு நன்மைகள்? தெரிஞ்சிக்கங்க…

nathan