சமையல் குறிப்புகள்அறுசுவை

சுவையான சத்து நிறைந்த சோள ரவை புட்டு குழந்தைகளுக்கும் நோயாழிகளுக்கும் உகந்தது!…

தேவையான பொருட்கள் :

சோளக்குருணை – 1 கப்

அரிசி மாவு – 1/4 கப்
தேங்காய்த்துருவல் – 3/4 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி – 3 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – சிறிது

rava piddu

செய்முறை :

முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button