சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா
ஷங்கர் மகாதேவன் ஒரு இந்திய திரைப்பட பின்னணி பாடகர், பாப் இசை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் இந்தி படங்களில் பல பாடல்களை பாடியுள்ள ஷங்கர் மகாதேவன், பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் ஷங்கர் ஈசன் ராய் மூவரில் ஒருவராக உள்ளார். அவரது குரல் வரம்பிற்கு பெயர் பெற்ற ஷங்கர் சிறந்த சமகால இந்திய பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சிறு வயதிலிருந்தே கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார்.
சூப்பர் சிங்கர் பல வருடங்களாக விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சி. தற்போது சீசன் 8 நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பின்னணி பாடகர்களான உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர் ஜூனியர் சீசன் 7ல் நடுவராக இருந்தார்.
இவர், ரசிகர்களின் மனதை கவர்ந்த, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘மேற்கே மேற்கே’, ‘தாலாட்டும் காற்றே வா’, உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.இந்நிலையில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் தனது மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..
Rompa Mukkiyam