29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?இத படிங்க!

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது. இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது.

நாம் உண்ணும் உணவைச் செரிப்பதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்களையும் அமிலங்களையும் சுரக்கின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் அவை நீர்த்துப் போகும். செரிமானம் பாதிக்கும்.

எனவே, உணவு உட்கொண்ட பின் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிலும், வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது. இளஞ்சூடாய் தண்ணீர் பருகுவது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது.

சிலருக்கு ‘ஜில்’லென்று பிரிட்ஜில் வைத்த தண்ணீர்தான் குடிக்கப் பிடிக்கும். ஆனால், குளிர்ந்த நீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும்.

சாப்பிட்டு முடித்தபின்னர் ‘ஜில்’லென்று தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகிவிடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படும். அதோடு, நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

மேலும், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது, எனவே வெதுவெதுப்பான தண்ணீரையே குடியுங்கள்.

Related posts

நவீன சமையல் பாத்திரங்களும் அதன் தீமைகளும்

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ இத படியுங்கள்!…

nathan

உடலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி இலைகள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!

nathan

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

இந்த வாஸ்து தவறுகள்- உங்க வீட்டில் இருந்தால் உங்க வாழ்க்கையில் நல்லதே நடக்காதாம் தெரியுமா?

nathan

வெள்ளைப்படுதலை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள்,..

nathan