நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!
நரம்புகளில் இருக்கும் மயலின் வேதிப்பொருளின் காரணமாக பல இலட்சக்கணக்கான நரம்புகள் சேர்ந்து தசைக்குள் சென்று மூளைக்கு கட்டளையை சேர்க்கிறது. இந்த கட்டளைகள் சரியான நேரத்தில் சென்றடையாமல் இருக்காதே நரம்பு தளர்ச்சி ஆகும்.
பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ள நபர்களுக்கு பாதங்களின் விரல்கள் சில நேரத்தில் உணர்ச்சியற்று இருக்கும்., தாம்பத்தியத்தில் ஈடுபாடு இருப்பது தளர்ந்து., கைகளின் நடுக்கம் மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
தனி ஒரு மனிதரின் மனநிலை மற்றும் சூழ்நிலை போன்று அதிக நாட்டத்தின் காரணமாக சுய பழக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படாது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கை நடுங்குதல் மற்றும் பதற்றத்திற்கு புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர எடுத்து கொள்ளாததே காரணமாகும்.
இதுமட்டுமல்லாது துரித உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்ளுதல்., இன்றுள்ள பலருக்கு இருக்கும் பிரச்சனையாக தூக்கமின்மை மற்றும் உடற்சோர்வு போன்ற காரணங்களும் உள்ளது. இதனை குறைப்பதற்கு அடிக்கடி மீன் சாப்பிடுதல்., சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல்., கீரை வகை உணவுகள் மற்றும் முளை கட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை நீங்கும்.