ஆரோக்கியம் குறிப்புகள்

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.

காலம் எவ்வளவு மாறினாலும் பூரி மற்றும் சப்பாத்தி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகமானோர் இருக்கவே செய்கின்றனர். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

* சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது கோதுமை மாவில் சிறிது `மலாய்’ சேர்த்து பிசையவேண்டும்.

* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.

* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.

* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.

* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.

* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.

* கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.

* சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.

* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.

* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.

* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.

* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.

* பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா…?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்ததும் இந்த செயலை கட்டாயம் செய்யுங்கள்!

nathan

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..?

nathan

இருமல் வரும்போதோ, தும்மல் வரும் போதோ சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்…

nathan

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க…

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?…

sangika