30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

நோய் வராமல் இருக்க சமையல் அறையை சுத்தமாய் வைத்திருங்கள்

சமையலறை, காய்கறி நறுக்கும் பலகை, கத்தி இவற்றினை அன்றாடம் சுத்தமாய் கழுவுகின்றீர்களா?. சமையல் அறையை சுத்தமாக வைத்திருந்தால் நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

நோய் வராமல் இருக்க சமையல் அறையை சுத்தமாய் வைத்திருங்கள்
சமையல் அறையை சுத்தமாய் வைத்திருங்கள்:-

* காய்கறி நறுக்கும் பலகை, கத்தி இவற்றினை அன்றாடம் சுத்தமாய் கழுவுகின்றீர்களா? அதாவது சுடுநீர் சோப் கொண்டு தினமும் சுத்தம் செய்கின்றீர்களா?
* சமையலறை தரையினை சுடுநீர் தரை சுத்தம் செய்யும் பொருள் கொண்டு தினம் இரு முறை சுத்தம் செய்யுங்கள்.
* சுத்தமான துணிகொண்டே பாத்திரங்கள், மேஜை இவற்றினைத் துடையுங்கள்.
* இரண்டு வாரங்களுக்கொருமுறை சமையல் பொருள் வைக்கும் இடங்களை சுத்தம் செய்யுங்கள்.
* வாரமொரு முறை சமையலறை ஜன்னல், கதவு, சுவர் இவற்றினை சுத்தம் செய்யுங்கள்.

ஒரே துணியினைக் கொண்டு அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யாதீர்கள். தனித்தனி துணிகளை பயன்படுத்துங்கள். துணிகளை சுடுநீர் சோப் சேர்த்து ஊற வைத்து பின் நன்கு துவைத்து அலசுங்கள்.

* பாத்திரங்களை வெதுவெதுப்பான நீர்+சோப் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது.
* பாத்திரங்களில் ஈரமின்றி வையுங்கள்.
* அலமாரிகளில் பூச்சி வராமல் இருக்க அதற்கான பாதுகாப்பான மருந்துகளை பயன்படுத்துங்கள்.
* சமைத்த உடனேயே அவ்விடத்தினை சுத்தம் செய்யுங்கள்.
* உணவுப் பொருட்களை நல்ல மூடி கொண்டு மூடுங்கள்.

* சமையலறை நல்ல வெளிச்சத்துடனும் காற்றோட்டத்துடனும் இருக்கட்டும்.
* குப்பை கூடையினை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள்.
* குப்பைகளை முறையாக உடனுக்குடன் கொட்ட வேண்டிய இடத்தில் முறையாய் கொட்டுங்கள்.

* சமையல் செய்யும் பொழுது உங்களது கைகள் சுத்தமாய் இருக்க வேண்டும். கையில் புண் காயத்தோடு சமையல் பொருட்களை கையாளாதீர்கள். இது மிகத் தவறானது. சிறு காயங்களை முறைப்படி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* சமையல் செய்யும் முன் உங்கள் தலைமுடியினை நன்கு வாரி முறைப்படுத்துங்கள். உணவில் முடி இருப்பது உறவு அல்ல. அருவருப்பு.
* கைகளை சோப் கொண்டு முழங்கை வரை சுத்தம் செய்த பின் சமயலைத் தொடங்குங்கள்.
* நகங்களில் இருக்கும் அழுக்கு உங்களுக்கும் மற்றவருக்கும் ஆரோக்கிய கேடு நகங்களை வெட்டி சுத்தமாய் வைத்திருங்கள்.

* உணவின் முன்பு இருமவோ, தும்மவோ செய்யாதீர்கள். செய்தால் கிருமிகளை பரப்பும் ஏஜண்டாக நீங்கள் மாறி விடுவீர்கள்.
* கழுத்தில் போன் வைத்து பேசிக்கொண்டே எந்த வேலையினையும் செய்வதை தவிருங்கள்.
* 200-க்கும் மேற்பட்ட நோய்கள் சுகாதாரமற்ற உணவினாலும், தண்ணீராலும் மட்டுமே ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு உயிரிழப்பு வரை கூட சென்று விடுகின்றது.
* கொழுப்பற்ற தயிருடன் சாலட் காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி இலைகள் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* பழங்கள் உண்ணும் பழக்கத்தினை கடை பிடியுங்கள்.
* செல்போன், டி.வி. இவற்றுடனான நேரத்தினை வெகுவாய் குறையுங்கள்.
* நிறைய அடிக்கடி நடங்கள்.
* பார்ட்டியில் அதிகம் சாப்பிட்டு விட்டீர்களா. பரவாயில்லை அடுத்த இரண்டு வேளை எளிய உணவாக அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* உணவு சமைக்கும் பொழுது முடிந்தவரை மூடி வையுங்கள்.

* பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமைக்க பயன்படுத்துவது தீங்கானது. எனவே பொரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அளவான எண்ணெயை பயன்படுத்துங்கள்.
* இரு வாரத்திற்கு கொருமுறை குளிர் சாதன பெட்டியினை சுத்தம் செய்யுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்!

nathan

எந்த வயதிற்குப் பிறகு, கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது என்பதை பெண்கள் அறிவார்கள்?

nathan

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

nathan

உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்?

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

உங்கள் கண்களில் இந்த பிரச்சனை இருந்தால், உங்களுக்கு மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று இருக்கலாம்!

nathan

முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-

nathan

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…

nathan

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan