பிரேமம் படத்தில் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. இந்தப் படம் அவருக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தமிழ் படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி பிசியாக உள்ளார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் சாய் பல்லவி ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மேஜர் முகுந்த் நினைவிடத்தில் நடிகை சாய் பல்லவி மரியாதை செலுத்தினார். பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.