சிற்றுண்டி வகைகள்

சேமியா பொங்கல்

தேவையானப்பொருள்கள்:

சேமியா – 2 கப்
ரவை – 1/2 கப்
பச்சைப் பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நெய் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரி – 10
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

* அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாக‌ சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

* அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

* ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா – ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.

* பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

* தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

* மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும். சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

* சுவையான சேமியா பொங்கல் சாப்பிட தயார்.

b08d7fe1 32e5 4597 bd64 9f5c64c37beb S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button