25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 6214e5d5a0
ஆரோக்கிய உணவு

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே இரத்த சோகை (Anemia) என்கிறோம்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

இதனால் பெண்களுக்கு பலவிதமான உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த இரத்த சோகை மூச்சிரைத்தல், படபடப்பு, உடல் சோர்வுடன் மாதவிலக்குப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதனை இயற்கைமுறையில் தடுக்க கறிவேப்பிலை பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில் இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். பிறகு அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பினை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்டி விடவேண்டும்.

அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி. இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

Related posts

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தின் அற்புதமான சில மருத்துவ குணங்கள்!!!

nathan

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதுதானா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan

உடல் எடையினால் அவதிப்படுகிறீர்களா?

nathan

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

nathan

நாக்கு ஊறும் சுவையான மட்டன் குழம்பு…

nathan

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

nathan