30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

பல வகையான மாவுகளை மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், முக்கியமாக கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.

மேலும், மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.

முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும்.

அப்படி, மாவை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

முதலில், மாவை காற்று புகாத பாத்திரங்களில் மாவை அறைகளில் வைக்கலாம்.

இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும்.

மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.

பின்னர், அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாமல் தடுக்கின்றனர்.

மேலும், பூச்சிகளை தடுக்க பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது.

மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம். அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம்.

Related posts

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

nathan

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!!

nathan

அடேங்கப்பா! பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உங்க எலும்புகளை இரும்பு போல் ஆக்க இந்த கீரை ஜூஸ் குடிங்க போதும்…!

nathan

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

சுவையான சுரைக்காய் குருமா

nathan