29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
Methods put children to bed SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே பல விதமான நோய்கள் பரவக்கூடும். அதிலும் வீட்டில் வளர்க்கும் குழந்தைகளை நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவர்கள் மழைக்கால தொற்றுகளால் எளிதில் தாக்கப்படக் கூடும். இப்பதிவில் மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு, காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது.

அதிலும், குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவுவதுதான் நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்கக்கூடாது.

குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, தலைக்கு குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன.

காய்ச்சல், சளி, சோர்வு, அசதி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலே உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை பெறுவது அவசியம். கொசுக்களை தடுக்க முதலில் வீட்டை சுற்றிலும் நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் தேவையில்லாமல் தண்ணீர் நிரப்பி வைப்பதை தவிருங்கள். தேவைப்படும்பட்சத்தில் அவற்றை நன்கு மூடி வையுங்கள். வீட்டை சுற்றி சாக்கடைகள் இருந்தால் வீட்டின் ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.

வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடுங்கள். இதன்பின்னர், குழந்தைகளின் கை, கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிடுங்கள்.

வீட்டு கதவு, ஜன்னல்களை மாலையில் மூடி வையுங்கள். அடிக்கடி கதவுகளை திறந்து மூடாமல் இருங்கள். காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டாமாக திறந்து வையுங்கள். குழந்தைகளுக்கு கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.

Related posts

எளிமையான தீர்வுகள்.!! மாதவிடாயை சுகாதாரமாக கடைபிடிப்பது குறித்து காண்போம்.

nathan

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

nathan

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?

nathan

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan

இந்த பழக்கம் உள்ள பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாம்…

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

nathan

ஏன் தெரியுமா செம்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது! ?

nathan