அடேங்கப்பா! தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவா இது? தற்போதைய நிலை இதோ

ஒட்டுமொத்த உலகமே அமைதியான சூழலில் இருப்பதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார்.

தற்போது COVID-19 என்னும் பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நோயால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசியுள்ளார்.

அதவது,

உலகம் முழுவதுமே ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இன்பம், துன்பம் இரண்டுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

இது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். பரபரப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்த நாம் இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

625.0.560.370.180.700.77

ஒட்டுமொத்த உலகமே அமைதியான சூழலில் இருக்கிறது. டிராபிக் ஜாம், ஹாரன் சத்தம், காற்று மாசு, ஒலி மாசு என எதுவுமே இல்லாமல் அமைதி பூங்கா உள்ளது என்று சொல்லலாம்.

நீண்ட நாட்களாக பேச வேண்டும் என நினைத்த உறவினர்களிடம் எல்லாம் நெருங்கி பேசமுடிகிறது.

வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். எங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் தோட்டம் உள்ளது.

சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித்தோட்டத்துக்கு போய் பழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன். உதிர்ந்த பழுத்த இலைகளை எடுத்து ஓரமாகப் போடுவது, செடிகளைப் பராமரிப்பது, அங்கிருக்கிற பூக்கள்கிட்ட பேசிக்கிட்டே தண்ணீர் ஊத்துவது என்று நேரம் போவதே தெரியாது. பின் நைட் ஒரு குளியல் போட்டுட்டு இரவு உணவினை எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.625.0.560.370.180.700

அப்புறம் அம்மாவும், நானும் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு தான் தூங்கப்போவோம். ஊரடங்கு உத்தரவு மட்டும் இல்லாமல் பெரும்பாலும் இது தான் என்னுடைய ரொட்டீன் லைப்.

ஷூட்டிங் இல்லாத நாள்களில் இப்படித்தான் வீட்டில் பொழுது போகும். அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக் டவுண் நாள்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்று நடிகை சீதா தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button