31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

நம்ப முடியலையே…வீட்டில் மணி பிளான்ட் வளர்ப்பதால் இவ்வளவு விசயங்கள் நடக்குமா?

 

மணி பிளான்ட் என்பது ஒரு கொடி. இன்று பலர் வீடுகளில் மணி பிளான்டை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. காரணம் இது பணம் கொட்டும் என்பதை விட வீட்டிற்கு அழகு சேர்க்கிறது என்பதே முதன்மை காரணம்.

அதோடு அதன் வளர்ச்சி நம்மை பாசிட்டிவாக மாற்றுகிறது. அதுமட்டுமன்றி மணி பிளான்டை வளர்க்க அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. சூரியன் வெளிச்சம் கொஞ்சம் கிடைத்தாலே போதுமானது அது நன்கு வளர்ந்துவிடும். அதேபோல் இதற்கு அதிக பராமரிப்பும் தேவைப்படாது.

பச்சை பசேலென அதிக பராமரிப்பு இல்லாமல் வளரும் இந்த செடிக்கு மண் வளம் கூட தேவையில்லை. ஒரு ஜார் தண்ணீரில் ஒரு காம்பை கிள்ளி வைத்தாலும் அது நன்கு வளரும். எனவேதான் வீட்டிற்குள்ளேயும் பலர் இண்டோர் பிளான்டாக வளர்க்கின்றனர்.

அவ்வாறு வீட்டிற்குள் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த மணி பிளான்ட்டுகளை காணும்போது மனதிற்குள் அமைதியை கொடுக்கிறது. வீட்டையும் அலங்கரிக்கிறது. தூய காற்றை சுவாசிக்க நினைத்தாலும் மணி பிளான்ட்டை வீட்டிற்குள் இண்டோர் பிளான்டாக வளர்க்கலாம்.

 

இப்படி பல வழிகளில் சௌகரியமாக இருப்பதாலேயே பலரும் மணி பிளான்ட்டை வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். அவ்வாறு வீட்டிற்குள் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த மணி பிளான்ட்டுகளை காணும்போது மனதிற்குள் அமைதியை கொடுப்பதுடன் வீட்டையும் அலங்கரிக்கிறது. தூய காற்றை சுவாசிக்க நினைத்தாலும் மணி பிளான்ட்டை வீட்டிற்குள் இண்டோர் பிளான்டாக வளர்க்கலாம்.

இப்படி பல வழிகளிலும் நமக்கு சௌகரியமாக இருப்பதாலேயே பலரும் மணி பிளான்ட்டை வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். காடுகளில் வளரக்கூடிய மணி பிளான்டுகள் 50 முதல் 60 அடி உயரம் வரை வளரும். ஆனால் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகள் 15-20 அடி மட்டுமே வளரும்.

எனவே மணி பிளான்ட் வளர்க்க நீங்களும் முடிவு செய்துவிட்டால் தென்கிழக்கு திசையில்தான் மணி பிளான்டை வைக்க வேண்டுமாம். ஏனெனில் அந்த திசையில்தான் பாசிடிவ் எனர்ஜி அதிகமாக கிடைக்கும் என்றும் அந்த இடத்தில் வைக்கும்போது நன்கு வளரும் என்றும் கூறுகின்றனர்.

 

அதேபோல் மணி பிளான்டை வடகிழக்கு திசையில் வைத்து வளர்கக் கூடாது. ஏனெனில் இது நெகடிவ் எனர்ஜி தரும் திசை என்பதால் அது மனதளவில் கவலைகள், நிம்மதியின்மையை தரலாம். அதோடு செடியும் மெதுவாகவே வளரும் பட்டுப்போகும் என்கின்றனர்.

ஏற்கெனவே நீங்கள் செடி வளர்க்கிறீர்கள் எனில் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க தென்கிழக்கு திசையில் மாற்றி வைத்துப் பாருங்கள். அது உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரும் என சொல்லப்படுகின்றது.

Related posts

சூப்பர் டிப்ஸ் இரவில் ஊற வையுங்கள்! மறுநாள் சாப்பிடுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

nathan

100வயசு வரை வாழலாம்! காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள்

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

nathan

கருப்பு திராட்சை சாறு அருந்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

nathan

பூரி உருளைக்கிழங்கு பிரியரா? இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்.

nathan

தினமும் வறுத்த ஓமம் விதைகளை சூடான நீரில் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி

nathan