30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

இன்றைய காலக்கட்டத்தில் எந்த வயதினருக்கு எது மாதிரியான நோய்கள் உண்டாகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளும் உடல்நல பிரச்சினை கூட பின்னாளில் பெரும் பிரச்சினையாக மாறலாம். எந்த நோயும் அறிகுறிகள் இல்லாமல் ஒருவரை பாதிப்பதில்லை.

அறிகுறிகள் ஏற்படும்போதே உஷாராகி விட்டால் பெரிய பிரச்னைகள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

அப்படி நிச்சயம் அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுகள் குறித்து காண்போம்.

நெஞ்சுப் பகுதியில் அழுத்தமாக உணர்வது, இதயம் இறுகுவதுபோல உணர்வது, தாங்க முடியாத தொடர்வலி… முதலியவை உடனே கவனிக்கப்பட வேண்டியவை. இவை இதயம் தொடர்பான கோளாறுகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும்.

திடீரென்று தாங்க முடியாத தலைவலி ஏற்படுவது, மூளை தொடர்பான பிரச்னைகளுக்கான முக்கியமான அறிகுறி. தலைவலியுடன் சேர்த்து கண்களில் பாதிப்பு ஏற்படுவது, இன்னும் ஆபத்தானது. குறிப்பாக, கண்களின் பின்பகுதியில் வலிப்பது, பார்வை மங்கலாகத் தெரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்பிட்ட சில காலங்களுக்குள் உடல் எடை அதிகம் குறைவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே. சர்க்கரைநோய், நாளமில்லாச் சுரப்பி பாதிப்புகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான அறிகுறிகளாகவும் இவை இருக்கலாம்.

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து கட்டிகள் வருவதும் ஆபத்தே. பெரும்பாலும் இவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கும்.

சிலருக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி எடுக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் பலர், அது செரிமானக் கோளாறாக இருக்கலாம் என்று சுய மருத்துவம் செய்துகொள்வதைக் காணலாம். உண்மையில் நீர்க்கட்டி, அல்சர், குடல்வால் அழற்சி, குடல் பாதிப்புகள் போன்றவற்றின் அறிகுறிகளாகவும் அடிவயிற்றில் வலி இருக்கக்கூடும்.

வாந்தி, தொடர் வயிற்றுப்போக்கு, அதிகளவு காய்ச்சல்… இவை மூன்றும் ஏற்பட்டு, இரண்டு நாள்களுக்கும் மேலாக உடல் வலுவின்றி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Related posts

தெரிந்துகொள்வோமா? நாள் முழுவதும் களைப்புடன் இருப்பது போல் உணர்வதற்கான காரணங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் அடிக்கடி மலம் வெளியேறுவது சாதாரணமானதுதானா?

nathan

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாமதமாகும் மாதவிடாய்க்கு தீர்வு தரும் கைவைத்தியங்கள்

nathan

படிக்கத் தவறாதீர்கள்!..பெண்களுக்கு வயதிற்கேற்ப பரிசோதனை அவசியம்

nathan

பெண்களை அழகாக மாற்றும் ஆளுமை

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்!

nathan

காதலியை நினைத்துக்கொண்டு மனைவியுடன் வாழும் ஆண்கள்

nathan