4 பேரால் பலாத்காரத்திற்கு ஆளான 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு:
கவுகாத்தி: அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பனிபூர் தெக்ரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சொந்த வேலைக்காக திப்ருகார் சென்றுள்ளார். அதன்பின், சிறுமி வீடு திரும்பியபோது, அதே பகுதியில் வசிக்கும் 17 முதல் 21 வயதுடைய நான்கு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். அவர்கள் சிறுமியை மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று இரவு முழுவதும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது மகள் திப்ருகர் சென்றுவிட்டு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், பானிபூர் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு பேர் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, இது கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.