27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
whenwereallyneedtodocaesarean
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

பிரசவத்தின் போது சில மருத்துவ நிலை அல்லது சிரமங்கள் ஏற்படும் வகையில், வலுவான காரணம் இருந்தால் மட்டுமே சிசெரியம் அவசியம்.

ஆனால், நாம் பிரசவலி வந்தாலே பயந்து சிசேரியன் செய்ய ஒப்புதல் கூறிவிடுகிறோம். சிசேரியன் செய்தால் லாபம் என்பதால் பல தனியார் மருத்துவமனைகளும் சிசேரியன் செய்ய வைக்க தான் முயற்சி செய்கின்றனர்.

உண்மையில் எந்தெந்த நிலைகள் நேர்ந்தால், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறித்து குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தம்பதிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பணம் போனால் போகட்டும் என நினைப்பவர்கள், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் தான் பிரசவத்திற்கு பிறகு அதிக வலி மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

காரணம் #1

பிரசவ வலி தாமதம் ஆவது, பிரசவத்திற்கு குறித்த நேரம் வரை பிரசவ வலியே இல்லாமல் இருப்பது.

காரணம் #2

குழந்தையின் இதயத்துடிப்பு குறைய துவங்குவது அல்லது குறைந்து காணப்பட்டால்.

காரணம் #3

தொப்புள்கொடி குழந்தையை சுற்றி இருந்தாலோ, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டரியப்பட்டாலோ.

காரணம் #4

குழந்தை இயல்பான எடைக்கு அதிகமாக இருந்தாலோ, உருவத்தில் பெரிதாக இருந்தாலோ.

காரணம் #5

தாயின் கருவறையில், குழந்தை சிக்கலான நிலையில் இருந்தால்.

காரணம் #6

இரட்டை குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேலான எண்ணிக்கையில் இருந்தால்.

காரணம் #7

தாய்க்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால்.

காரணம் #8

கர்ப்பப்பை வெடிப்பு / பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால்.

Related posts

நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க…

nathan

சூப்பர் டிப்ஸ் கொழுப்பு எனர்ஜியாக மாறனுமா? அப்ப இத படிங்க!

nathan

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…

nathan

பல்களிலுள்ள மஞ்சள் நிற காவிகளை போக்க நேச்சுரல் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி தெரியுமா?

nathan

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

nathan

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! மூலிகைகள் கீரைகள்!!

nathan

மூட்டு வலியை போக்கும் வர்ம புள்ளிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

nathan