30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

பிரசவ கால சிக்கல்களை உணர்த்தக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!

கர்ப்ப காலம் என்பது மகிழ்ச்சியான காலம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு போதுமான ஓய்வு அவசியம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முழு கால கர்ப்பத்தின் போது சில வகையான சிக்கல்களை அனுபவிக்கலாம்.

உடல்நலம் மற்றும் பிற விபத்துக்கள் போன்ற வெளிப்புற காரணிகள் இந்த உணர்திறன் காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். சில எச்சரிக்கைகள் உள்ளன. இந்த முன்னெச்சரிக்கைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவும்.

வலியுடன் கூடிய சுருக்கம்
சிறு அளவிலான வயிறு வலி என்பது கர்ப்ப காலத்தில் பொதுவானதாக இருந்தாலும் வயிறு அதிக அளவு சுருங்கி விரிவதற்கான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால் அது தீவிர நிலையை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். பிரசவ தேதிக்கு முன்கூட்டியே இந்த வகையான வலி அதிகரித்து காணப்பட்டால் இது பிரசவ வலியாகவும் இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

அதிகமான இரத்தப்போக்கு

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் பல பெண்கள் இரத்தப்போக்கு குறித்து மருத்துவரிடம் கூறுவார்கள். இது ஒரு இயல்பான செய்தியாகும். ஆனால் கர்ப்ப காலத்தின் இறுதியில் உங்களுக்கு மிக அதிக இரத்தப்போக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் அதனை நிச்சயம் அலட்சியம் செய்ய வேண்டாம். நஞ்சுக்கொடி அசாதாரணமான நிலையில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய இரத்தப்போக்கு மிக அதிக ஆபத்தை உண்டாக்கக்கூடும், மேலும் குழந்தை மற்றும் தாய்க்கு அதிக சிக்கலை உண்டாக்கக்கூடும்.

பிறப்புறுப்பில் நீர் வெளிவருவது

பிறப்புறுப்பில் வெளியேற்றம் என்பது கர்ப்ப காலத்தில் பொதுவானதாக இருந்தாலும், அதிகரித்த திரவ வெளியேற்றம் என்பது ஆபத்தானது. பொதுவாக இது பனிக்குடம் உடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் பிரசவ தேதிக்கு முன்னதாக இந்த அறிகுறி ஏற்பட்டால் அது தீவிர நிலையை உணர்த்தலாம். பொதுவாக பனிக்குட நீரில் குழந்தை சுற்றப்பட்டிருக்கும், மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த நீர் மிகவும் அத்தியாவசியமானது. அதனால் பனிக்குடம் பிரசவ தேதிக்கு முன்கூட்டியே உடைவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பார்வைக் கோளாறு

கர்ப்ப காலத்தின் இறுதி இரண்டு மாதங்களில் மயக்கம் மற்றும் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படலாம். குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருக்கும் போது பார்வை மங்குதல் போன்ற குறைபாடு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறி மிகவும் ஆபத்தான விளைவை உண்டாக்கக்கூடும்.

கால் பாதம் மற்றும் கைகளில் வீக்கம்

மேலே கூறிய அறிகுறிகள் போலவே, கர்ப்ப காலத்தில் கால் பாதம், கைகள் போன்றவற்றில் வீக்கம் ஏற்படுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் வீக்கத்துடன் தடிப்புகள் மற்றும் சருமம் சிவந்து போவது போன்ற அறிகுறிகளும் இணைந்திருந்தால் அது கவனிக்க வேண்டியதாகிறது. இரத்த உறைவு இதற்கு பின்னால் இருக்கும் காரணமாக இருக்கலாம். அதனால் உங்கள் சருமத்தில் ஏற்படும் அசாதாரண நிலை குறித்த கவனம் எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் கைகள், கால் பாதம், முகம் போன்ற இடங்களில் வலியுடன் கூடிய வீக்கம் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

Related posts

இல்லறம் இனிக்க கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது

nathan

கர்ப்பிணிகளுக்கான எளிய சித்த மருந்துகள்

nathan

மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த விஷயங்கள மறந்துகூட செய்யாதீங்க…!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!

nathan

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

nathan

துப்பட்டாவே ஆயுதம் ஆகும்!

nathan

வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவம்

nathan

சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan