30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

பிரசவத்தின் போது சில மருத்துவ நிலை அல்லது சிரமங்கள் ஏற்படும் வகையில், வலுவான காரணம் இருந்தால் மட்டுமே சிசெரியம் அவசியம்.

ஆனால், நாம் பிரசவலி வந்தாலே பயந்து சிசேரியன் செய்ய ஒப்புதல் கூறிவிடுகிறோம். சிசேரியன் செய்தால் லாபம் என்பதால் பல தனியார் மருத்துவமனைகளும் சிசேரியன் செய்ய வைக்க தான் முயற்சி செய்கின்றனர்.

உண்மையில் எந்தெந்த நிலைகள் நேர்ந்தால், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறித்து குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தம்பதிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பணம் போனால் போகட்டும் என நினைப்பவர்கள், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் தான் பிரசவத்திற்கு பிறகு அதிக வலி மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

காரணம் #1

பிரசவ வலி தாமதம் ஆவது, பிரசவத்திற்கு குறித்த நேரம் வரை பிரசவ வலியே இல்லாமல் இருப்பது.

காரணம் #2

குழந்தையின் இதயத்துடிப்பு குறைய துவங்குவது அல்லது குறைந்து காணப்பட்டால்.

காரணம் #3

தொப்புள்கொடி குழந்தையை சுற்றி இருந்தாலோ, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டரியப்பட்டாலோ.

காரணம் #4

குழந்தை இயல்பான எடைக்கு அதிகமாக இருந்தாலோ, உருவத்தில் பெரிதாக இருந்தாலோ.

காரணம் #5

தாயின் கருவறையில், குழந்தை சிக்கலான நிலையில் இருந்தால்.

காரணம் #6

இரட்டை குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேலான எண்ணிக்கையில் இருந்தால்.

காரணம் #7

தாய்க்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால்.

காரணம் #8

கர்ப்பப்பை வெடிப்பு / பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால்.

Related posts

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

nathan

இன்சுலின் செடி – சர்க்கரை நோயாளிகளின் வரமா?

nathan

இன்ஹேலர் பயன்படுத்தலாமா?

nathan

மார்பகப் புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் !தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களுக்கு ஏற்படும் நரம்பு முடிச்சு பிரச்சனை

nathan

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

nathan

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

nathan

ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?… தெரிஞ்சிக்கங்க…

nathan