32.8 C
Chennai
Monday, Sep 30, 2024
cooking 759
சமையல் குறிப்புகள்

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.

இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.

ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.

எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.

இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.

Related posts

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா…

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

சூப்பரான ஜவ்வரிசி போண்டா

nathan

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி!…

sangika

இல்லத்தரசிகளே!.. எந்தெந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?…

nathan

ஓவன் இல்லாமல் பிட்சா செய்வது எப்படி?

nathan

சுவையான கடாய் காளான் கிரேவி

nathan

சுவையான பன்னீர் கோலாபுரி

nathan

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு

nathan