29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
30 1509367904 8
முகப் பராமரிப்பு

உங்க அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? இதை முயன்று பாருங்கள்!

கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதிகளவு க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இந்த பகுதியில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது என்பது பற்றி காணலாம்.

1. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

2. வெந்தய கீரை
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

3. தயிருடன் எலுமிச்சை
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

4. சர்க்கரை மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

5. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கய வைத்து பின்பு கழுவ வேண்டும். இதில் உள்ள பிளிச்சீங் தன்மை முகத்தில் உள்ள கருமைகளை மறைக்கிறது

6. எலுமிச்சை தேன்
வெயிலில் சுற்றி திரிவதனால் உங்கள் முகம் கருப்பாகி விட்டதா அதை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் மிருதுவாகும்.

7. பால், சந்தனம்
பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.

8. முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் தழும்புகள் மறையும்.

9. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் சிறிது லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைய தோன்றும்.30 1509367904 8

 

Related posts

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

நீங்கள் நைட் தூங்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு விஷயத்த மட்டும் பண்ணுங்க… அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்…

nathan

வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ்!!

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்

nathan

காய்கறி ஃபேஷியல்:

nathan

சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

கோடையில் முகம் பொலிவாக இருக்க என்ன மாதிரியான ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan