27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201704120919138161 What happens when sweat in summer SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்

வெயில் காலத்தில் வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பார்க்கலாம்.

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்
கோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம்.

கோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு வியர்வையை துடைக்காமல் காய வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்கு வியர்த்து, அது அப்படியே உடலில் காயும் போது, ஒருவித அசௌகரியத்தை மற்றும் அரிப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் வியர்வையானது அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை ஒன்று சேர்த்து, அரிப்பை உண்டாக்குகிறது.

வியர்வை உடலில் காயும் போது, அது ஆரம்பத்தில் அரிப்பை உண்டாக்கும். அந்த அரிப்பு அப்படியே நீடிக்கும் போது, அது பயங்கரமான தடிப்புக்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் இம்மாதிரியான நிலை உடலில் மடிப்புக்கள் உள்ள பகுதிகளில் தான் ஏற்படும்.

அதிகமாக வியர்வை வெளியேறும் போது, நம்மில் பலரும் ஃபேனிற்கு கீழே அமர்ந்து, வியர்வையை உலர்த்துவோம். ஆனால் இப்படி செய்யும் முன் மீண்டும் யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த செயலால் உடுத்திய ஆடையில் வியர்வை காயும் போது, அது நாள் முழுவதும் நம்மீது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வியர்வை அதிகம் வெளியேறி, அது அப்படி உடலில் காயும் போது, சருமத்தில் ஒருவித பிசுபிசுப்புத்தன்மையை ஏற்படுத்தும். அதோடு மிகுந்த அசௌகரியத்தையும் உணர வைக்கும்.

வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும் போது, வியர்க்குரு வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் வியர்வை உடலில் அப்படியே காயும் போது, அது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சி, வியர்க்குருவை உண்டாக்கும்.
201704120919138161 What happens when sweat in summer SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா? கூடாதா?

nathan

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்…!

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் செய்யவேண்டியவை…

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, 24 மணிநேரம் கழித்துப் பருகுவதால் என்ன பலன்கள் !!

nathan

குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க அச்சப்படுகிறவர்களுக்கு ஆரோக்கியமான குளியல் சித்தமருத்துவ முறைப்படி!…

sangika

இந்த ஐந்து ராசி பெண்களும் மற்ற ராசி பெண்களை விட சீக்கிரம் காதலில் விழுந்துருவாங்களாம்…

nathan