​பொதுவானவை

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம்.

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி, உளுந்து – தலா கால் கப்,
பாசிப் பருப்பு – 4 மேஜைக்கரண்டி,
கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் – 1 கப்,
முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்,
இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பால் – 2 கப்,
சுக்கு, ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* சாமை அரிசி, உளுந்து, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல் பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த சாமையை போட்டு அதனுடன் 2, 3-ம் தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து, குழைய வேகவிடவும்.

* வெந்ததும் நன்கு மசித்து அதனுடன் முதல் தேங்காய்ப் பால், பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அடிபிடிக்காமல் நன்றாக கலக்கி இறக்கவும்.

* சத்தான சாமை உளுத்தங்கஞ்சி ரெடி.

* சூடாகப் பருகினால் சுவையாக இருக்கும்.

Related posts

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

nathan

சுவையான உருளை கிழங்கு பொரியல்

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்

nathan

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

nathan

சாம்பார் பொடி செய்வது எப்படி

nathan

ருசியான… வாழைக்காய் ஃப்ரை

nathan