30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
​பொதுவானவை

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம்.

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி, உளுந்து – தலா கால் கப்,
பாசிப் பருப்பு – 4 மேஜைக்கரண்டி,
கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் – 1 கப்,
முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்,
இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பால் – 2 கப்,
சுக்கு, ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* சாமை அரிசி, உளுந்து, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல் பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த சாமையை போட்டு அதனுடன் 2, 3-ம் தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து, குழைய வேகவிடவும்.

* வெந்ததும் நன்கு மசித்து அதனுடன் முதல் தேங்காய்ப் பால், பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அடிபிடிக்காமல் நன்றாக கலக்கி இறக்கவும்.

* சத்தான சாமை உளுத்தங்கஞ்சி ரெடி.

* சூடாகப் பருகினால் சுவையாக இருக்கும்.

Related posts

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

nathan

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan

வெற்றிலை நெல்லி ரசம்

nathan

சுவையான பக்வீட் பக்கோடா

nathan

சுவையான உருளைக்கிழங்கு தோசை

nathan